பல்லவி
இதே3 பா4க்3யமு கா3கயேமியுன்னதி3ரா ராம
அனுபல்லவி
ஸதா3 நீ பத3 பங்கஜமுலனு
ஸம்மதமுக3 1பூஜிஞ்சு வாரி(கிதே3)
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர த3ஸ1ரத2 நந்த3ன
ஹ்ரு2த3யாரவிந்த3முன நின்னுஞ்சி 2தானே
ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி அதி3யு கா3க
இந்து3 த4ரு மொத3லந்த3ரினி ஸுர
ப்3ரு2ந்த3 பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல
தானெந்து3 3கனியானந்த3முன
நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 வாரி(கிதே3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதே3/ பா4க்3யமு/ கா3க/-ஏமி-/உன்னதி3ரா/ ராம/
இதுவே/ பேறு/ அல்லாது/ (வேறு) என்ன/ உள்ளதய்யா/ இராமா/
அனுபல்லவி
ஸதா3/ நீ/ பத3/ பங்கஜமுலனு/
எவ்வமயமும்/ உனது/ திருவடி/ தாமரையினை/
ஸம்மதமுக3/ பூஜிஞ்சு வாரிகி/-(இதே3)
முழு மனதுடன்/ தொழுவோருக்கு/ இதுவே...
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர/ த3ஸ1ரத2/ நந்த3ன/
அழகிய/ தசரதன்/ மகனே/
ஹ்ரு2த3ய/-அரவிந்த3முன/ நின்னு/-உஞ்சி/ தானே/
இதய/ கமலத்தினில்/ உன்னை/ இருத்தி/ தானே/
ப்3ரஹ்மானந்த3மு/-அனுப4விஞ்சி/ அதி3யு கா3க/
பரமானந்தத்தினை/ துய்த்து/ மேலும்/
இந்து3/ த4ரு/ மொத3லு/-அந்த3ரினி/
பிறை/ அணிவோன்/ முதலாக/ யாவரிலும்/
ஸுர ப்3ரு2ந்த3/ பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல/
வானோர்கள்/ அந்தணர்கள்/
தானு/-எந்து3/ கனி/-ஆனந்த3முன/
தன்னை/ எங்கும்/ கண்டு/ ஆனந்தமாக/
நீயந்து3/ பா4வன/ ஜெந்து3சு/-உண்டு3 வாரிகி/-(இதே3)
உன்னிடம்/ உள்ளுணர்வு/ கொண்டு/ இருப்போருக்கு/ இதுவே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூஜிஞ்சு - ஸேவிஞ்சு.
3 - கனியானந்த3முன - கனியானந்த3முக.
6 - ராகா3து3ல தோட3 - ராகா3து3ல தோடி3 : இவ்விடத்தில் 'தோட3' என்பதே பொருந்தும். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.
சரணங்கள் 1-ம், 2-ம், சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
Top
மேற்கோள்கள்
4 - மதி3 ரோஸி - மனத்தினாலும் துறந்து - கண்ணன் கீதையில் (2-வது அத்தியாயம், 59-வது செய்யுள்) கூறியது -
"விடயங்கள், விரதமிருப்போனிடமிருந்து விலகுகின்றன;
(அவற்றின்) அவா (சுவை) விலகுவதில்லை. அவாவும் (சுவையும்), பரம்பொருளினை யறிந்தபின் விலகுகின்றன." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்) (விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்)
Top
5 - கர்மமு பா3ஸி - கர்மங்களைத் துறந்து - கண்ணன் கீதையில் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) கூறுவது -
"அனைத்து தருமங்களையும் துறந்து, என் ஒருவனையே புகலடைவாயாக;
நான், உன்னை, அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
7 - ப4வ ஸாக3ரமுனு தா3டி - பிறவிக் கடலைத் தாண்டி. இது குறித்து நாரத பக்தி சூத்திரம் (46 மற்றும் 50-வது செய்யுட்கள்) கூறுவது -
"எவன் கடக்கின்றான், எவன் கடக்கின்றான், மாயையினை? எவனொருவன் புலன் நாட்டங்களைத் துறக்கின்றானோ, சான்றோர்களுக்கு எவன் சேவை செய்கின்றானோ, எவன் அகந்தையற்றுள்ளானோ, அவனே கடக்கின்றான், அவனே கடக்கின்றான்; அவன் மற்றோரையும் கடத்துவிக்கின்றான்." (ஸ்வாமி தியாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
2 - தானே ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி, அந்த3ரினி தானெந்து3 3கனி, நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 - 'தானே பரமானந்தத்தினைத் துய்த்து', 'தன்னை எங்கும் கண்டு', 'உன்னிடம் உள்ளுணர்வு கொண்டு' - இச்சொற்கள் யாவும் அபரோக்ஷ - நேரடி - அனுபூதியினால் உணரப்படவேண்டியவை. அத்தகைய அனுபூதி பெற்றவர்களே இவற்றிற்கு உண்மையான விளக்கம் தரமுடியும். என்னைப்போன்று, வெறும் கல்வியறிவின் துணை கொண்டு, பொருள் கூறுவது இயலாததும், தவறானதும் கூட.
Top
தன்னை எங்கும் கண்டு - 'தன்னில் கண்டு' என்றும் கொள்ளலாம்.
கருமங்கள் - இச்சைகளுக்காக புரியும் பணிகள்.
காசி ஈசன் - சிவன்.
இராகம் ஆகிய - இசையினைக் குறிக்கும்.
விழிப்புடனிருப்போனே - தொண்டர்களைப் பேணுவதில்.
பாகவதன் - சிறந்த தொண்டன்.
Top